ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தொடக்கம்.. ஏ.ஆர்.ரஹ்மான் தலைமையில் கலைநிகழ்ச்சிகள்

x

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் தொடக்க விழா கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் களைகட்டியது.


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் முன்னிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தலைமையில் தொடக்க விழாவில் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பிரபல பாடகர் சோனு நிஹம், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், டைகர் ஷ்ரோஃப் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் பங்கேற்றனர். கயிற்றில் இருந்து அந்தரத்தில் தொங்கியபடி அக்சய் குமார் என்ட்ரி கொடுத்தது ரசிகர்களை கவர்ந்தது. தமிழ்ப் பாடல்களை ஏ.ஆர். ரஹ்மான் பாடியபோது ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். ஏராளமான நடனக் கலைஞர்களும் தொடக்க விழாவில் பங்கேற்ற நிலையில், கண்கவர் வாண வேடிக்கைகளுடன் தொடக்க விழா நிறைவு பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்