இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? - எகிறும் எதிர்பார்ப்பு

x

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கும் நிலையில், இந்தியா முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2 வது டெஸ்ட் போட்டி இன்று, விசாகப்பட்டினத்தில் துவங்குகிறது. இந்த போட்டியில் வென்று, இங்கிலாந்திற்கு இந்தியா பதிலடி கொடுக்குமா என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்போட்டியிலிருந்து தசைப்பிடிப்பு காரணமாக ஜடேஜாவும், தொடை பகுதி தசை நாரில் ஏற்பட்ட வலி காரணமாக கே.எல்.ராகுலும் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விராட் கோலி விளையாடாத நிலையில், ஜடேஜாவும், ராகுலும் அணியில் இல்லாதது, இந்தியாவிற்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்