திடீரென மைதானத்தில் தோன்றிய அமைதி... சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்

x

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 353 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 219 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 3ம் நாள் ஆட்டத்தை இந்தியா இன்று காலை தொடங்கிய நிலையில், குல்தீப் யாதவ் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் துருவ் ஜுரல் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். 90 ரன்களுக்கு ஆட்டமிழந்த துருவ் ஜுரல் சதத்தை தவறவிட்டார். முதல் இன்னிங்சில் இந்தியா 307 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து ஸ்பின்னர் ஷோயப் பஷீர் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். முதல் இன்னிங்சில் இந்தியாவை விட 46 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து, 2வது இன்னிங்சில் தற்போது விளையாடி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்