விராட் கோலி எடுத்த முடிவு..? - பிசிசிஐ சொன்ன அதிமுக்கிய தகவல்

x

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வென்று இந்தியா பதிலடி தந்த நிலையில், 3வது டெஸ்ட் போட்டி வரும் 15-ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. இந்நிலையில் மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று தேர்வு செய்கிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் தனிப்பட்ட காரணங்களால் கோலி விளையாடாத நிலையில், கோலியின் பங்கேற்பு குறித்து அவரிடம் கேட்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருந்து பெற்ற பும்ராவுக்கு, 3வது போட்டியில் மட்டும் ஓய்வு அளிக்கப்படலாம் என தெரிகிறது. காயத்தில் இருந்து குணமடையாததால் முகமது ஷமி, ஜடேஜா ஆகியோருக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. அதேசமயம் காயம் காரணமாக ஓய்வளிக்கப்பட்ட கே.எல்.ராகுல் மீண்டும் அணியில் சேர்க்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்