போக்சோ வழக்கு.. இந்திய ஹாக்கி வீரர் விலகல்

x

போக்சோ வழக்குப் பதியப்பட்டுள்ள இந்திய ஹாக்கி வீரர் வருண்குமார், எஃப்.ஐ.ஹெச் புரோ லீக் ஹாக்கி தொடரில் இருந்து விலகியுள்ளார். வருண்குமார் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாகவும், தன்னிடம் பல முறை அத்துமீறியதாகவும் இளம் பெண் அளித்த புகாரில் பெங்களூரு போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், சட்டரீதியாக வழக்கை எதிர்கொள்ள வருண்குமார் அவசர விடுமுறை வாங்கியுள்ளார். தன்னிடம் பணம் பறிப்பதற்காக இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக ஹாக்கி வீரர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்