சென்னை அணிக்கு புதிய கேப்டன்.. கேப்டன் பதவியில் இருந்து விலகினார் தோனி

x

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் இன்று தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இந்நிலையில், சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகி, புதிய கேப்டனாக தொடக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டு உள்ளார். கோப்பையை வைத்து நடைபெற்ற போட்டோ ஷூட்டில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நின்றார். கேப்டன்ஷிப் மாற்றம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சென்னை அணி, கேப்டன்ஷிப்பை ருத்துராஜிடம் தோனி வழங்கி இருப்பதாகவும் போட்டிகளை எதிர்நோக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியது ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்