கிரிக்கெட்டில் கால் பதிக்கும் ஆர்.கே.சுரேஷ்... "சிறந்த வீர‌ர்களுக்கு IPL-ல் வாய்ப்பு" |

x

சென்னை அளவில் இளம் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காணும் வகையில், சென்னை பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் இரண்டாவது சீசன் இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான வீர‌ர்கள் ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. தி நகர், ஈசிஆர், ஆவடி, சாலிகிராமம் உள்ளிட்ட 10 பகுதிகளில் இருந்து அணியின் உரிமையாளர்கள் வீர‌ர்களை ஏலம் எடுத்தனர். புதிதாக சேர்க்கப்பட்டுள்ள விருகம்பாக்கம் அணியின் உரிமையாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ், ஏலத்தில் கலந்து கொண்டு, வீர‌ர்களை தேர்வு செய்தார். இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீர‌ர்கள், TNPL, IPL போன்ற போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்று போட்டி ஒருங்கிணைப்பாளர் பிரதீப் சுரேஷ் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்