ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த வங்கதேசம் | ICC

x

கொழும்புவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இந்திய அணியில் கோலி, ஹார்திக் பாண்டியா, பும்ரா உள்ளிட்டோருக்கு ஓய்வளிக்கப்பட்டு சூர்யகுமார், முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். திலக் வர்மா ஒருநாள் போட்டிகளில் அறிமுக வீரராக களமிறங்கினார். முதலில் பேட் செய்த வங்கதேசம் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சதம் விளாசிய சுப்மன் கில் 121 ரன்கள் எடுத்திருந்த போதும், இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. எனினும் இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற நிலையில், இந்த தோல்வி எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறிய வங்கதேசம், ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்தது.


Next Story

மேலும் செய்திகள்