மீண்டும் உயிர்த்தெழுந்த தென் ஆப்பிரிக்கா

x

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. நார்த் சிட்னி நகரில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டி மழை காரணமாக 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய மகளிர் அணி, 149 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தென் ஆப்பிரிக்கா, ஒருநாள் தொடரை ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்