"அஸ்வின் விளையாடுவார்" - பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

x

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது நாள் டெஸ்ட் போட்டியில், பந்துவீச்சாளர் அஸ்வின் மீண்டும் விளையாடுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் மற்றும் 2வது நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அஸ்வின், 3ஆம் நாள் ஆட்டத்தில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார். அவரது குடும்ப உறுப்பினரின் மருத்துவ அவசர நிலை காரணமாக அஸ்வின் சென்னை திரும்பினார். இந்நிலையில், 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில் அவர் மீண்டும் அணியில் இணைந்துவிட்டதாக, பிசிசிஐ அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்