உள்ளூர் கால்பந்து லீக் போட்டி..நடுவரை முகத்தில் குத்திய அங்காரா அணியின் தலைமை நிர்வாகி

x

துருக்கியில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியில் அணி ஒன்றின் தலைமை நிர்வாகி, கள நடுவரை முகத்தில் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்காரா அணியின் தலைமை நிர்வாகி ஃபாருக், ரைஸ்போர் அணிக்கு எதிரான போட்டி முடியும் தருணத்தில் களத்திற்கு ஓடி வந்து நடுவரின் முகத்திலேயே குத்தினார். இதில் காயம் அடைந்த கள நடுவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். கடைசி நிமிடத்தில் எதிரணி பதில் கோல் அடித்ததால் நடுவரை, ஃபாருக் குத்தியதாக தெரிகிறது. காயம் அடைந்த நடுவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நடுவரை குத்திய நபர் கைது செய்யப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்