சீறிப்பாய்ந்த தென்னாபிரிக்கா...திணறும் இந்தியா..ஆட்டம் மாறுமா.. | India Cricket

x

செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 5 ரன்களுக்கும், ஜெய்ஸ்வால் 17 ரன்களுக்கும், சுப்மன் கில் 2 ரன்களுக்கும் வெளியேறினர். சற்று தாக்குப்பிடித்த கோலி 38 ரன்களுக்கும், ஷ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். நிலைத்து நின்று ஆடிய கே.எல்.ராகுல் அரைசதம் அடித்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்து உள்ளது. கே.எல்.ராகுல் 70 ரன்களுடனும் சிராஜ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 5 விக்கெட்டுகளை சாய்த்து இந்திய பேட்டர்களை திணறடித்தார். 2ம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி நாளை மதியம் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்