சிறுமியை வன்புணர்வு செய்ததாக தொடரப்பட்ட வழக்கு.. சிறைக்கு செல்கிறார் பிரபல கிரிக்கெட் வீரர்

x

17 வயது சிறுமியை வன்புணர்வு செய்ததாக நேபாள சுழற்பந்துவீச்சாளர் சந்தீப் லமிச்சேன் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட லமிச்சேன், பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் லமிச்சேனை குற்றவாளி என காத்மண்டு மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது. லமிச்சேனுக்கான தண்டனை குறித்து விரைவில் நீதிமன்றம் அறிவிக்க உள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரரான லமிச்சேன், வன்புணர்வு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு இருப்பது நேபாள கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்