இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா - கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

இந்திய-தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளது.
x
இந்திய-தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டெஸ்ட், ஒருநாள், டி-20 போட்டிகளில் விளையாட திட்டமிட்டு இருந்தது. வருகிற 17-ம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் என அட்டவணை வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அணியுடனான கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்து உள்ளது. இந்த கிரிக்கெட் தொடர் பின்னர் நடைபெறும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்து உள்ளார். தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், வீரர்களின் நலனைக் கருதி, இந்த தொடர் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

Next Story

மேலும் செய்திகள்