முதன்முறையாக ரெய்னாவை கைவிட்ட சென்னை

ஐபிஎல்லில் முதன்முறையாக சென்னை அணியில் ரெய்னா தக்கவைக்கப்படாதது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
x
ஐபிஎல்லில் முதன்முறையாக சென்னை அணியில் ரெய்னா தக்கவைக்கப்படாதது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அணியின் தொடக்க சீசனில் இருந்து தோனியோடு சுரேஷ் ரெய்னாவும் அங்கம் வகித்து வந்தார். 2020ஆம் ஆண்டு சீசனை தவிர்த்து சென்னை பங்கேற்ற அனைத்து சீசனிலும் விளையாடியுள்ள ரெய்னா, 172 போட்டிகளில் 4,654 ரன்கள் குவித்து அதிக ரன் எடுத்தவராக திகழ்கிறார். பேட்டிங், ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டதன்மூலம், அணியின் முதுகெலும்பாக திகழ்ந்து வந்த ரெய்னா, கடந்த சீசனில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சூழலில், முதன்முறையாக சென்னை அணி ரெய்னாவை ஐபிஎல்லில் தக்கவைக்காமல் போனது அவரது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. 2 புதிய அணிகள் டிராஃப்ட் முறையில் வீரர்களை விலைக்கு வாங்க முடியும் என்பதால், ரெய்னாவை தேர்வு செய்வார்களா என கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை இரு அணிகளும் ரெய்னாவை தேர்வு செய்யாவிட்டால், மெகா ஏலத்தில் ரெய்னா கலந்துக்கொள்வார். இவை சாத்தியமானால் மீண்டும் ரெய்னாவை சென்னை அணி ஏலமெடுக்க வாய்ப்பு உருவாகலாம்.











Next Story

மேலும் செய்திகள்