CSK - வின் அடுத்த கேப்டன் ஜடேஜா?

ஐபிஎல்லில் சென்னை அணியில் தோனியைவிட அதிக தொகைக்கு ரவீந்திர ஜடேஜா தக்கவைக்கப்பட்டுள்ளார்.
x
ஐபிஎல்லில் சென்னை அணியில் தோனியைவிட அதிக தொகைக்கு ரவீந்திர ஜடேஜா தக்கவைக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், ஏற்கனவே உள்ள 8 அணிகள் அதிகபட்சம் 4 வீரர்களை தக்கவைக்கலாம் என அறிவிக்கப்பட்டது. சென்னை அணி முதல் வீரராக ரவீந்திர ஜடேஜாவை 16 கோடி ரூபாய்க்கும், இரண்டாவது வீரராக கேப்டன் தோனியை 12 கோடி ரூபாய்க்கும் தக்கவைத்தது. சென்னை அணியில் முதல் வீரராக தோனிக்கு முன்னதாக ஜடேஜா தக்கவைக்கப்பட்டது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஜடேஜாவின் ஃபார்ம் மற்றும் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எனவும், தோனிக்கு பிறகு சென்னை அணியை ஜடேஜா வழிநடத்த அதிக வாய்ப்புள்ளதாகவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர் 

Next Story

மேலும் செய்திகள்