தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர்: 3-க்கு 0 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரை இந்தியா வென்று உள்ளது.
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர்: 3-க்கு 0 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி
x
மாலத்தீவு தலைநகர் மாலேவில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியாவும் நேபாளமும் மோதின. இதில், முதல் பாதியில் இரு அணிகளும் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டன. தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதியில், இந்திய கேப்டன் சுனில் சேத்ரி, சுரேஷ் சிங், அப்துல் சமாத் ஆகியோர் கோல் அடித்து அசத்தினர். நேபாள வீரர்கள் கோல் அடிக்க முயன்றும், இந்திய வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் முடியாமல் போனது . இதனால், ஆட்ட நேர முடிவில் 3-க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்று, 8-வது முறையாக தெற்காசிய சாம்பியன் ஆனது. 


Next Story

மேலும் செய்திகள்