"தோனியை தக்க வைக்கிறோம்" - சி.எஸ்.கே. நிர்வாகம் : தோனி குறித்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரிலும், தோனி விளையாடுவார் என்பதை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உறுதிப்படுத்தி உள்ளது.
தோனியை தக்க வைக்கிறோம் - சி.எஸ்.கே. நிர்வாகம்  : தோனி குறித்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்
x
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரிலும், தோனி விளையாடுவார் என்பதை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உறுதிப்படுத்தி உள்ளது.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் சீசனில், சென்னை அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றிருந்தாலும், கேப்டன் தோனியின் ஆட்டத்தில் தடுமாற்றம் தொடர்கிறது. இந்த சூழலில், தோனியின் கடைசி ஐ.பி.எல். தொடராக இது இருக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில், சென்னை ரசிகர்கள் முன்னிலையில்தான், தனது கடைசி ஐ.பி.எல். ஆட்டம் இருக்கும் என்பதை தோனியே அறிவித்தார்.இதன் மூலம், 2022 ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரிலும் தோனி விளையாடுவார் என்பது தெளிவாகியுள்ளது. இதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், தோனியை தக்க வைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.மேலும், அடுத்த சீசன் தான் தோனியின் கடைசி ஐ.பி.எல். தொடர் என்பதை உறுதியாக சொல்ல முடியாது எனவும் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது, தோனி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. ரசிகர்களின் மனநிலை இது....
அதேசமயம், டெஸ்ட் போட்டி போல் ஆடுகிறார், கேப்டனாக மட்டுமே வந்து போகிறார், ஃபார்மில் இல்லை போன்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படும் நிலையில், தோனியை சென்னை அணி தக்க வைத்தது குறித்து, கிரிக்கெட் விமர்சகர் ஸ்ரீராமிடம் கேட்டோம்...20 ஓவர் கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது, தோனியின் ஆட்டத்திலும் வெளிப்படலாம். ஐதராபாத் அணிக்கு எதிராக, கடைசி பந்தில் அவர் சிக்ஸர் அடித்ததைப் போல... 



Next Story

மேலும் செய்திகள்