டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டி - இந்திய வீரர் சுமித் நாஹல் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியின் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறி, தமிழக வீரர் சரத் கமல் சாதனை படைத்து உள்ளார்.
x
டோக்கியோவில் இன்று நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில், போர்ச்சுகல் வீரர் அப்போலோனியாவும், சரத் கமலும் மோதினர். இதில் முதல் செட்டை போர்ச்சுகல் வீரர் வென்றார். அடுத்த 2 செட்களை சரத் கமல் கைப்பற்றினார். ஆட்டத்தின் நான்காவது செட் மீண்டும் போர்ச்சுகல் வீரர் வசம் சென்ற நிலையில், 11-க்கு 6, 11-க்கு 9 என்று அடுத்தடுத்து 2 செட்களை சரத் கமல் கைப்பற்றி போட்டியில் வென்றார். இதன்மூலம், ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில், மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் சரத் கமல் படைத்து உள்ளார். 3-வது சுற்று ஆட்டத்தில், கடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சீன வீரர் மா லாங்குடன், சரத் கமல் மோத உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்