விம்பிள்டன் டென்னிசில் மேட்ச் பிக்சிங்? - 2 போட்டிகளில் மோசடி என ரகசிய உள்ளீடு

உலக பாரம்பரியமிக்க விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மேட்ச் பிக்சிங் நடந்துள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விம்பிள்டன் டென்னிசில் மேட்ச் பிக்சிங்? - 2 போட்டிகளில் மோசடி என ரகசிய உள்ளீடு
x
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் உலக பாரம்பரியமிக்க, பழமையான போட்டியாகும். லண்டனில் 1877 முதல் புல்தரையில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் தனி இடம்பிடித்திருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மேட்ச் பிக்சிங் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றிலும், இரட்டை பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றிலும் இந்த மேட்ச் பிக்சிங் மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.ஒற்றையர் பிரிவில் ஜெர்மனி வீரர் பங்குபெற்ற ஆட்டத்தில் மோசடி நடைபெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் சந்தேகிக்கப்படும் போட்டியில் சம்பந்தப்பட்ட ஜோடி முதல் செட்டை வெற்றிப்பெற்றுள்ளது. இதற்கு அடுத்த செட்களையும் வசப்படுத்தி அந்த ஜோடி வெற்றிபெறலாம் என்ற கட்டத்தில் வேண்டுமென்றே தோல்வியை தழுவியுள்ளனர் எனக் கூறப்படுகிறது.மோசடி குறித்து தங்களுக்கு ரகசிய உள்ளீடு மூலம் எச்சரிக்கை வந்துள்ளதாக கூறியிருக்கும் சர்வதேச டென்னின்ஸ் வாரியத்தின் செய்தி தொடர்பாளர், மேட்ச் பிக்சிங் குறித்து எந்த ஒரு ஆவணமும் தங்களிடம் பகிரப்படவில்லை எனக் கூறியிருக்கிறார்.இதற்கிடையே மேட்ச் பிக்சிங், பெருமளவு தொகையுடன் அரங்கேறியிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.  டென்னிஸ் உலகை அதிரச்செய்திருக்கும் இந்த மேட்ச் பிக்சிங் குறித்து சர்வதேச டென்னிஸ் வாரியம் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறது.  


Next Story

மேலும் செய்திகள்