விம்பிள்டன் கோப்பையை ஏந்திய ஆஸ்லே பார்டி - மகளிர் ஒற்றையர் பிரிவில் சாதனை

முதன்முறையாக விம்பிள்டன் டென்னிஸ் தொடரை வென்று ஆஷ்லே பார்டி சாதனை படைத்துள்ளார்..
விம்பிள்டன் கோப்பையை ஏந்திய ஆஸ்லே பார்டி - மகளிர் ஒற்றையர் பிரிவில் சாதனை
x
முதன்முறையாக விம்பிள்டன் டென்னிஸ் தொடரை வென்று ஆஷ்லே பார்டி சாதனை படைத்துள்ளார்.. கிராண்ட்ஸ்லாம் தொடரான விம்பிள்டனில் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்றது. இதில் உலகின் முதல் நிலை வீராங்கனையான் ஆஸ்திரேலியாவின் ஆஸ்லே பார்ட்டி, செக் வீராங்கனை பிளிஸ்கோவாவை எதிர்கொண்டார். முதல் செட்டில் அபாரமாக விளையாடிய பார்டி, 6க்கு 3 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றினார். 

இரண்டாவது செட்டில் பிளிஸ்கோவா, கடுமையான சவால் அளிக்க, போட்டி விறுவிறுப்படைந்தது. செட்டை வெல்ல இருவரும் கடுமையாக போராடியதால், டைபிரேக்கர் வரை சென்றது. இறுதியாக 7க்கு 6 என்ற கணக்கில் பிலிஸ்கோவா கைப்பற்றியதால், போட்டியில் அனல்பறந்தது. இருப்பினும் இறுதி செட்டில் ஆதிக்கம் செலுத்திய பார்டி 6க்கு 3 என்ற கணக்கில் கைப்பற்றி 6க்கு 3, 6க்கு 7, 6க்கு 3 என்ற செட் கணக்கில் வாகை சூடி முதன்முறையாக விம்பிள்டன் தொடரை வென்று அசத்தினார். 




Next Story

மேலும் செய்திகள்