இந்தியா-ஆஸி. கடைசி டெஸ்ட் போட்டி- 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜ்

பிரிஸ்பேனில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியா வெற்றி பெற 328 ரன்களை இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்து உள்ளது.
இந்தியா-ஆஸி. கடைசி டெஸ்ட் போட்டி- 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜ்
x
இன்று அதிகாலை தொடங்கிய 4-ஆம் நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலியா தனது 2-ஆவது இன்னிங்சில் 294 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் அந்த அணி, 327 ரன்கள் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக அந்த அணியின் ஸ்டீவன் ஸ்மித் 55 ரன்களும், தொடக்க வீரர் வார்னர் 48 ரன்களும் அடித்தனர். இந்திய அணி தரப்பில் சிராஜ் 5 விக்கெட்டுகளையும், தாக்கூர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 4-ஆம் நாள் ஆட்டத்தின் மத்தியில் சிறிது நேரம் மழை குறுக்கிட்டது. இதன்பிறகு, 2-ஆவது இன்னிங்சை இந்தியா தொடங்கியது. விக்கெட் இழப்பின்றி இந்தியா 4 ரன்கள் எடுத்து இருந்தபோது, மீண்டும் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் தடைபட்டு முன்கூட்டியே முடிக்கப்பட்டது. நாளை நடைபெறும் கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற 324 ரன்கள் தேவைப்படுகிறது.



Next Story

மேலும் செய்திகள்