இந்தியா-ஆஸி கடைசி டெஸ்ட் போட்டி - அறிமுக வீரர் வாஷிங்டன் சுந்தர் அரைசதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியா, தனது முதல் இன்னிங்சில் 336 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா-ஆஸி கடைசி டெஸ்ட் போட்டி - அறிமுக வீரர் வாஷிங்டன் சுந்தர் அரைசதம்
x
பிரிஸ்பேன் மைதானத்தில் நடந்து வரும் இந்த போட்டியின் 3-ம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா, ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனைத் தொடர்ந்து, ஜோடி சேர்ந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும், பந்துவீச்சாளர் ஷ்ராதுல் தாக்கூரும் சிறப்பாக விளையாடினார். அறிமுக போட்டியில் அசத்தலாக ஆடிய சுந்தர் அரைசதம் அடித்தார். தாக்கூர் 67 ரன்களுக்கும், சுந்தர் 62 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, இந்தியா, முதல் இன்னிங்சில் 336 ரன்களுக்கு, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அபாரமாக பந்துவீசிய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து, 2-ஆவது இன்னிங்சை ஆரம்பித்த ஆஸ்திரேலியா, 3-ஆம் நாள் ஆட்ட முடிவில், விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்து, இந்தியாவைக் காட்டிலும் 54 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்