டெல்லியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா

ஐ.பி.எல் 42 வது லீக் ஆட்டத்தில் டெல்லியை எதிர்கொண்ட கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டெல்லியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா
x
அபுதாபி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்த‌து. இதன் படி களமிறங்கிய கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா 81 ரன்களும், சுனில் நரைன் 64 ரன்களும் எடுத்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 194 ரன்கள் எடுத்த‌து. தொடர்ந்து விளையாடிய டெல்லி அணியில், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் 47 ரன்கள் எடுத்தார். அடுத்த‌டுத்து வந்த வீர‌ர்களை தன் சுழற்பந்துவீச்சால் சுருட்டினார் தமிழக வீர‌ர் வருண் சக்ரவர்த்தி. 5 விக்கெட் வீழ்த்திய வருண் சக்ரவர்த்தி ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி, 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த‌து.  


ஐதராபாத்தை வீழ்த்தியது பஞ்சாப் - 126 ரன்கள் எடுத்தும் வென்றது பஞ்சாப்

டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த ஐதராபாத் அணியில் சந்தீப் சர்மா, ரஷீத்கான், ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பஞ்சாப் அணி சார்பில் நிகோலஸ் பூரான் அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய ஐதராபாத் அணியில், 3 வீர‌ர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். 4 வீர‌ர்கள் ரன் எதுவும் எடுக்கவில்லை. இதனால், 114 ரன்களில் சுருண்டது ஐதராபாத். பஞ்சாப் அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

முதல் இடத்திற்கு முன்னேறுமா பெங்களூரு?

ஐ.பி.எல் 44 வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி, பெங்களூருவை இன்று எதிர்கொள்கிறது. துபாய் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு இந்த போட்டி நடைபெற உள்ளது.  இந்த போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும். சென்னை அணி ஏற்கனவே ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்துள்ளதாலும், இனிவரும் போட்டிகளில் இளம் வீர‌ர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என தோனி கூறியுள்ளதாலும் சென்னை அணியில் எந்த மாதிரியான மாற்றங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

"சென்னை அணியின் தோல்வியை ஏற்க முடியவில்லை" - சென்னை அணி ரசிகர்களின் குமுறல்

சிஎஸ்கே அணி முதல் முறையாக ப்ளே ஆப் சுற்றுக்கே தகுதி பெறாமல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சென்னையில் இந்த நிலைக்கு காரணம் என்ன?  என்பது குறித்து ரசிகர்கள் தெரிவித்த கருத்துகளை தற்போது பார்க்கலாம்... 

Next Story

மேலும் செய்திகள்