பஞ்சாப் - ராஜஸ்தான் மோதல் : சுவாரஸ்ய தகவல்கள்
பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகள் இடையேயான மோதலில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை தற்போது காணலாம்..
இந்த போட்டியில் 224 ரன்கள் சேஸ் ராஜஸ்தான் அணி ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் சேஸ் செய்த அணி என்ற சாதனையை படைத்திருக்கிறது.. இதற்கு முன்பு டெக்கான் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி 215 ரன்கள் சேஸ் செய்ததே சாதனையாக இருந்தது.
ஒரு ஓவரில் 5 சிக்சர் விளாசியவர்கள் பட்டியலில் ராகுல் திவாட்டியா இணைந்துள்ளார்.
ஒரு ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர் விளாசிய வீரர்கள் பட்டியலிலும் ராகுல் திவாட்டியா இணைந்துள்ளார்.
ஒரு போட்டியில் பவுண்டரிகள் அடிக்காமல் ஏழு சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ராகுல் திவாட்டியா முதலிடம் பிடித்துள்ளார்.
ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, 7.3 ஓவரில் சாம்சன் அடித்த பந்தை பவுண்டரி லைனில் நின்ற பூரான் சிக்சர் செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய விதம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
Next Story