ஆஸி.க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி : இந்திய அணி திரில் வெற்றி

500-வது வெற்றியை பதிவு செய்த இந்தியா
ஆஸி.க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி : இந்திய அணி திரில் வெற்றி
x
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. நாக்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ்வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. கேப்டன் கோலி, சர்வதேச ஒருநாள் போட்டியில் 40-வது சதத்தை பூர்த்தி செய்தார். கோலி 116 ரன்களில் வெளியேற, 48 புள்ளி 2வது ஓவரில் இந்திய அணி 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வலுவான தொடக்கம் அமைந்தது. கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தமிழக வீரர் விஜய் சங்கர்  இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா வெல்லும் 500-வது போட்டியாகும்.

Next Story

மேலும் செய்திகள்