நேரம் பார்த்து இளையராஜா செய்த செயல்..."ஒத்த ஓட்டுக்காகவா இப்படி பண்ணனும்?"

x

நேரம் பார்த்து இளையராஜா செய்த செயல்..."ஒத்த ஓட்டுக்காகவா இப்படி பண்ணனும்?" - கரித்து கொட்டும் நெட்டிசன்கள்

டெல்லி நிர்வாக மசோதா தொடர்பாக மாநிலங்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்றது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.டெல்லி நிர்வாக மசோதா தொடர்பாக மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் நியமன எம்.பி.யான இசையமைப்பாளர் இளையராஜா கலந்துகொண்டார்.

டெல்லி அரசின் அதிகாரத்தை பறிக்கும் இந்த மசோதா, ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. சுமார் 8 மணி நேர விவாதத்துக்கு பின், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், டெல்லி நிர்வாக மசோதா குறித்த வாக்கெடுப்பில் இளையராஜா பங்கேற்றதை சமூகவலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். சரியான நேரம் பார்த்து இளையராஜா மாநிலங்களவை சென்று, மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். இத்தனை நாள் அவைக்கு செல்லாமல் இதற்கு மட்டும் அவைக்கு இளையராஜா சென்றது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்