"ஜெயலலிதாவுக்கு அன்று நடந்தது.. அந்த தீர்ப்பை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" - ஓபிஎஸ் பதிலடி

x

சட்டப்பேரவையில் கடந்த 1989ம் ஆண்டு, ஜெயலலிதா தாக்கப்படவில்லை என சொல்வதுதான் நாடகம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஓ.பி.எஸ், 1989ம் ஆண்டு சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கப்பட்டது உண்மையிலேயே நடைபெற்ற சம்பவம் என்றும்,

நடந்த உண்மையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரித்துக் கூறுவது கண்டனத்துக்கு உரியது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த விவகாரத்தில் அப்போதைய பேரவைத் தலைவர் தீர்ப்பு வழங்கி இருப்பதை சுட்டிக்காட்ட விரும்புவதாகக் கூறியுள்ள ஓபிஎஸ்,

25.03.1989ம் ஆண்டு சட்டப்பேரவையில் நடந்ததை நன்கு கண்ணுற்றும், நாடகம் என்று சொல்வதுதான் நாடகம் என்றும்,...

அன்று நடந்தது உண்மை என்பதை அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் உணர்த்திவிட்டார்கள் என்றும் தெரிவித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்