"ஜாதியைப் பார்த்து அரசியல் செய்வது..." - அர்ஜுன் சம்பத் ஆவேசம்

x

ஜாதியைப் பார்த்து அரசியல் செய்து மக்களை பிரிவினைப்படுத்துவது திராவிடக் கட்சிகள் தான் என்றுஇந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்... இந்து மக்கள் கட்சி சார்பில் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற தலைப்பில் விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திராவிட கட்சிகள் தமிழகத்தைத் திவாலான மாநிலமாக்கிக் கொண்டிருப்பதாகவும், இந்த நிலை மாறி தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் எனவும் தெரிவித்தார்... மேலும், விலைவாசி உயர்வு, வரி உயர்வு என கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் திமுக ஆட்சி மீது அதிருப்தியில் இருப்பதாகவும், தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி சார்பில் செங்கோல் வழிபாடு நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்