சூடுபிடிக்கும் தேர்தல் களம் - அமைச்சர் உதயநிதி போட்ட பதிவு | udhyanithi stalin

x

மக்களவை தேர்தலையொட்டி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இதுகுறித்து தனது X தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியா கூட்டணிக்காக முதலமைச்சர் ஸ்டாலின், திருச்சியில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியிருப்பதாக கூறியுள்ளார். தமிழ்நாட்டின் மையத்தில் இருந்து கிளம்பியிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினின் குரலை எட்டுத்திக்கும் எடுத்துச் செல்ல, தனது முதற்கட்டத் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருச்சுழியில் இன்று தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த ஒரு மாதம், வீசும் காற்றில் கூட பாசிசத்துக்கு எதிரான போர்க்குரல் கலந்திருக்கட்டும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்