பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு குறித்து `X'தளத்தில் முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்வீட்

x

தமிழ்மொழியை தகவமைத்திடும் சிந்தனைகளுக்கு ஊக்கமாக பன்னாட்டு கணித்தமிழ் மாநாடு அமைந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய தமிழிணையம்-99 மாநாட்டை தொடர்ந்து, தற்போது பன்னாட்டு கணித்தமிழ் மாநாடு நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். புதிய தொழில்நுட்பங்களுக்கேற்ப தமிழ்மொழியை தகவமைத்திடும் சிந்தனைகளுக்கு ஊக்கமாக 3 நாள் மாநாடு நடந்துள்ளதாக, தெரிவித்துள்ளார். மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட அனைவருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து மற்றும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்