இன்று திருச்சி வரும் பிரதமர் மோடி.. ஸ்ரீரங்கத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு | Srirangam

x

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் தரிசனம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை திருச்சி வருகிறார்.

காலை 10.15 மணிக்கு திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை தரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு 10.40 மணிக்கு ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள தளத்தில் தரையிறங்க உள்ளார். பின்னர், கோயிலின் வடக்கு கோபுரம் வழியாக உள்ளே நுழையும் பிரதமர், கோவிலின் தெற்கு நுழைவு கோபுரத்தின் வழியாக 11 மணிக்கு உள்ளே செல்ல உள்ளார். பின்னர், கோவிலில் இருக்கும் கருடாழ்வார் சன்னதி, மூலவர் பெரிய பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி, ராமானுஜர் சன்னதி உள்ளிட்ட முக்கிய சன்னதிகளில் பகல் 12.30 மணி வரை தரிசனம் மேற்கொள்கிறார். அதைத் தொடர்ந்து, கோயிலில் இருந்து வெளியே வரும் பிரதமர் மோடி, கார் மூலமாக மீண்டும் ஹெலிகாப்டர் தளத்திற்கு வர உள்ளார். பகல் 12.55 மணிக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்டு, பிற்பகல் 2 மணிக்கு பிரதமர் மோடி, ராமேஸ்வரம் செல்ல உள்ளார். பிரதமரின் வருகையை ஒட்டி ஸ்ரீரங்கத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்