"இது முதல் ஆரம்பம் மட்டும் தான்" - பேரவையில் டி.ஆர்.பி.ராஜா சொன்ன தகவல்

x

சட்டப்பேரவை நடைபெற்ற வரும் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் ஆர்பிஉதயகுமார், முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் வெளிநாடு பயணம் சென்றது தொடர்பாகவும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் தொடர்பாகவும் வெள்ளை அறிக்கை அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா,

திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் இதுவரை 9 லட்சத்து 56 ஆயிரம் லட்சம் கோடிக்கு முதலீட்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக கூறினார்.

முதலீடுகள் மூலம் இதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறினார். இதுவரை 875 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்