வார்த்தையை விட்ட குஷ்பூ ... - தமிழகத்தில் வெடித்த போராட்டம்

x

திருப்பூரில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் குஷ்பூவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து இழிவுபடுத்திப் பேசியதாக, குஷ்பூவின் உருவ படத்தை எரிக்க முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகாசியில் குஷ்பூவின் உருவ படத்தை எரித்து தி.மு.க.வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்த தி.மு.க. மகளிரணியினர், தனது பேச்சுக்கு குஷ்பூ மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தினர்.

கன்னியாகுமரி ரயில் நிலையம் முன், திரண்டு வந்த தி.மு.க. மகளிர் அணியினர், குஷ்பூ மற்றும் தமிழக பா.ஜ.க. அண்ணாமலையின் உருவ படங்களை கிழித்தெறிந்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியிலும் தி.மு.க. மகளிர் அணி சார்பில் குஷ்பூவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து இழிவுபடுத்திப் பேசியதாக, குஷ்பூவின் உருவ படத்தை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்