"மீண்டும் அந்த மாணவர்களை பள்ளிக்கு கொண்டு வர வேண்டும்" - அமைச்சர் அன்பில் மகேஷ்

x

ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் வேலைக்குச் செல்லும் மாணவர்களை கண்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வரவேண்டுமென, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஈரோடு மாணிக்கம்பாளையம், பெருந்துறை, ​மொடக்குறிச்சி, பவானி உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆய்வு செய்தார். அங்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு 100 சதவீத தேர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்


Next Story

மேலும் செய்திகள்