தூத்துக்குடியை உலுக்கிய குழந்தைகள் பலி.. முதல்வர் நிதி உதவி

x

தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், 3 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். உறவினர்களுடன் குளிக்க சென்ற 3 குழந்தைகள் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்ததாக கூறிய முதல்வர், அவர்களது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், குழந்தைகளின் பெற்றோருக்கு பொது நிவாரண நிதியில் இருந்து 3 லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்