"இது ஒரு ஊழல் கட்சி"..பிரச்சார கூட்டத்தில் அனல் பறக்க பேசிய பிரதமர் மோடி

x

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சார கூட்டம் முடிவடையும் நிலையில், பிரதமர் மோடி காங்கிரஸ் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்...

அப்போது பேசிய அவர், ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாகவும், இத்தகைய அரசைக் கண்டதில்லை எனவும் குற்றஞ்சாட்டினார். அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை தூக்கி ஏறிய மக்கள் தயாராகி விட்டதாக அவர் தெரிவித்தார். இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து பல்வேறு ஊழல்களைக் கண்டிருப்பதாகக் கூறிய மோடி, நீர் மூழ்கி கப்பல், ஹெலிகாப்டர் என அனைத்திலும் காங்கிரஸ் கட்சி ஊழல் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். மேலும், நீர், நிலம், ஆகாயம் என அனைத்திலும் ஊழல் செய்வது தான் அக்கட்சியின் பாரம்பரியம் என மோடி விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்