"இந்த 2 அமைச்சர்களை பதவி நீக்க வேண்டும்" - பாஜவினர் பரபரப்பு கடிதம்

x

சனாதன விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபுவை பதவி நீக்கம் செய்யக்கோரி, ஆளுநரிடம் பா.ஜ.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில், ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பா.ஜ.க மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர். சனாதன விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோர், அமைச்சர்களாக பதவி ஏற்கும்போது எடுத்த உறுதிமொழிக்கு எதிராக செயல்பட்டதாகவும், இருவரையும் அமைச்சர் பதவியில் இருந்து சட்டரீதியாக நீக்க வேண்டும் என்றும் புகார் மனு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்