மருத்துவமனையில் தகராறு செய்த ஆசிரியர்.. குண்டுக்கட்டாக தூக்கி சென்ற போலீஸ்.. கோபிச்செட்டிப்பாளையத்தில் பரபரப்பு

x

தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர், கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் புகுந்து தகராறில் ஈடுபட்டார். வடுகபட்டி அரசு தொடக்கபள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் சத்தியபிரபு, மாணவனை தகாத வார்த்தையால் திட்டி, அடித்ததாக எழுந்த புகாரில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

இவரது மனைவி கோபி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வரும் நிலையில், அங்கு சென்ற சத்தியபிரபு, மருத்துவமனையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்ட நிலையில், அவரை போலீசார் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்