டீ கடையால் மூண்ட சண்டை - காவலர் மண்டையை உடைத்த கட்சியினர் - அரியலூரில் பரபரப்பு

x

அரியலூர் மாவட்டம்‌ செந்துறையில் திமுக - அதிமுகவினரிடையே நிகழ்ந்த மோதலில் கட்டுப்படுத்த சென்ற போலீசாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அரியலூர் மாவட்டம்‌ செந்துறையில் திமுக கட்சி அலுவலகம் செல்லும் பாதைக்கு இடையூறாக அதிமுக கட்சி அலுவலகம் எல்லையில் டீ கடை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. கடை சூறையாடப்பட்டதை கண்டித்து அதிமுகவினர்

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் கற்களை வீசியதால் சமரசம் செய்ய போலீசாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

மோதலை தடுக்க முயன்ற டிஎஸ்பி ஓட்டுநர் மண்டை உடைந்தது. மற்றொரு போலீசாருக்கு லேசான காயம்‌ ஏற்ப்பட்டது. அதனைத் தொடர்ந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு மோதல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்