வந்தாச்சு புது பாலம்.. நாளை திறந்து வைக்கிறார் முதல்வர்..!

x

சென்னையில் ராஜிவ் காந்தி சாலையில் வாகன நெரிசல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால், டைடல் பார்க் சிக்னல் சந்திப்பு மற்றும் இந்திரா நகர் சிக்னல் சந்திப்பை கடக்க பீக் அவர்சில் 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஆகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலை குறைக்க டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே 'யு' வடிவில் 108 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதன் சோதனை ஓட்டமும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த பாலத்தை, மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக நாளை திறந்து வைக்க உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்