`ஒரே call தான்' - நொடியில்சரி செய்த அமைச்சர்

x

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அலவாய்பட்டியில், தி.மு.க தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது, அங்கிருந்த வெண்ணந்தூரை சேர்ந்த பெண் ஒருவர், உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பித்ததாகவும், ஆனால் கிடைக்கவில்லை என்றும் கூறினார். இதையடுத்து, அமைச்சர் மதிவேந்தன், பேரூர் தலைவருடன் தொலைபேசியில் பேசி, தேர்தல் முடிந்ததும் உரிமைத்தொகை விண்ணப்பம் தொடர்பாக பதிலளிக்க வேண்டுமென தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்