"கோழைத்தனம்.. சர்வாதிகாரி ஒருவர்மரணித்த ஜனநாயகத்தை உருவாக்குகிறார்" குமரி முதல் டெல்லி வரை..

x

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்

அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அச்சமடைந்த சர்வாதிகாரி ஒருவர், மரணித்த ஜனநாயகத்தை உருவாக்க விரும்புவதாக சாடியுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களை கைது செய்வது தற்போது சாதாரண விஷயமாகி வருவதாகவும், இதற்கெல்லாம் இந்திய கூட்டணி தக்க பதிலடி கொடுக்கும் எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்