வேட்புமனுவையே மறந்து வீட்டில் விட்டு வந்த தங்கதமிழ்செல்வன்.. கடுப்பான அமைச்சர்கள்

x

வேட்பமான படிவத்தை மறந்து வைத்துவிட்டு வேட்பாளர் தாக்கல் செய்ய வந்த திமுக வேட்பாளர்

அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிறிது நேரம் காத்திருக்குப் பின் வேட்பு மனு கொண்டுவரப்பட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது

தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 5000க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்களுடன் ஆரவாரத்துடன் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்

தங்க தமிழ்செல்வனுடன் அமைச்சர்கள் ஐ பெரியசாமி மற்றும் மூர்த்தி ஆகியோர் உடன் வந்திருந்தனர்

அமைச்சர்கள் அனைவரும் காரை விட்டு இறங்கிய நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் பின்னால் வந்த காரில் இறங்கிய போதுதான் அவருக்குத் தெரிந்தது வேட்பு மனு படிவம் வேறு ஒரு காரில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்

இதனை எடுத்து உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட காரில் இருக்கும் வேட்பு மனுவை உடனடியாக கொண்டுவர அறிவுறுத்தினர்

இதன் காரணமாக அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் ஐபிஎல் சேமி மற்றும் கட்சி நிர்வாகிகள் சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்து இருந்தனர்

பின்னர் ஒரு வழியாக வேட்பு மனு படிவம் கொண்டுவரப்பட்டு அதனைப் பெற்றுக் கொண்டு தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட ஆட்சியரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்


Next Story

மேலும் செய்திகள்