"4 கால்களை உடைத்தால் தான் வளர்ச்சி அடைய முடியும்".. அண்ணாமலை காட்டம்

x

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை, நேற்று இரவு ஸ்ரீபெரும்புதூர் தேரடியில் இருந்து பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்களை சந்தித்து, அவர்கள் தந்த பொன்னாடை, மாலை, புத்தகம் ஆகியவற்றை பெற்றுக் கொண்டார். அப்போது பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் குடும்ப ஆட்சி, லஞ்ச ஊழல், ஜாதி அரசியல், அடாவடி ஆகிய நாற்காலியின் 4 கால்களை உடைத்தால்தான் உண்மையான அரசாட்சியை தமிழக மக்கள் பார்க்கலாம் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்