"சிவகங்கை பிரசாரம்... ஏன் ரத்து செய்தார் அமித்ஷா.." - செல்வப்பெருந்தகை கிடுக்குபிடி கேள்வி

x

பாஜக மீது அதிமுக சமீப காலமாக விமர்சனம் செய்து வருவது ஒரு நாடகம் என்றும், கொள்ளை புறம் வழியாக இவர்களுக்கு ஒரு உறவு உள்ளது என்று, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதற்காக அமித்ஷா சிவகங்கை தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்தார் என்பதை வெளியில் சொல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் புறந்தள்ளப்பட்ட கட்சியாக பாஜக உள்ளது என்றும், அந்த கட்சிக்கு வெறுப்பு அரசியலைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்று செல்வப்பெருந்தகை விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்