"பொது வெளியில் என்னை..." "சீமான் மன்னிப்பு கேட்கணும்... இல்ல ரூ 2 கோடி தரணும்" - வீரலட்சுமி

x

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவருக்கு தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

வீரலட்சுமி சார்பில் அவரது வழக்கறிஞர் அனுப்பிய நோட்டீஸில், வீரலட்சுமியை தமிழர் அல்லாதவர் என சீமான் பொது வெளியில் பேசியுள்ளதாகவும், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தபோதும், திருவள்ளூர் வீர ராகவர் கோயிலுக்கு சாமி தரிசனம் மேற்கொள்ள வந்த போதும், வீரலட்சுமியை நாம் தமிழர் கட்சியினர் அருவருக்கத்தக்க வார்த்தைகளில் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... வீரலட்சுமியின் தாய் மொழி தெலுங்கு எனவும், சமுதாயம் நாயுடு எனவும் நாம் தமிழர் கட்சியினர் அவதூறு கருத்துக்களைப் பரப்பி வருவதாகவும், வக்கீல் நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களில் சீமான் வீரலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இல்லை என்றால் சீமானால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு அவரிடம் 2 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்