சீமான் பேச்சு - "கைது செய்ய வேண்டும்" - சிறுபான்மையினர் நல கூட்டமைப்பினர் புகார்

x

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சிறுபான்மையினர் நல கூட்டமைப்பினர் புகார் அளித்துள்ளனர். சிறுபான்மை மக்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியிருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் இந்துக்கள் என அனைவரும் மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருவதாகவும், சமூக பகையை ஏற்படுத்த சீமான் முயல்வதாகவும் குற்றம் சாட்டிய சிறுபான்மை நல கூட்டமைப்பினர், சீமான் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்