"முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்" - வாக்குறுதி கொடுத்த SDPI வேட்பாளர்

x

"முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்" - வாக்குறுதி கொடுத்த SDPI வேட்பாளர்

#sdpi #candidate #dindugal #electioncampaign #elections2024 #electionswiththanthitv

திண்டுக்கல் மக்களவை தொகுதியை, இந்தியாவின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் நெல்லை முகமது முபாரக் வாக்குறுதி அளித்துள்ளார். திண்டுக்கல் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் நெல்லை முபாரக், நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் ஆகியோரும் முபாரக்கிற்கு ஆதரவாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். பிரசாரத்தில் பேசிய முபாரக், தான் வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்தில் திண்டுக்கல் மக்களின் குரலாக ஒலிப்பேன் என உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்