சூடுபிடிக்கும் தேர்தல் - சத்யபிரதா சாகு சொன்ன தகவல்

x

திருக்கோவிலூர், விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலை நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் சார்பில், தேர்தல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாகு, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா? என்பதை இளைஞர்கள் உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்காக முதற்கட்டமாக இரண்டு துணை ராணுவப் படை குழுக்கள் தமிழகம் வந்துள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்